உலக ஜூனியர் தடகளம் சாம்பியன்ஷிப் – வெண்கலம் வென்ற இந்தியா …!

Published by
Edison

20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகளம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது.

கென்யா தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 4*400 மீ., கலப்பு தொடர் ஓட்ட தகுதிச்சுற்றில் இந்தியாவின் கபில், பிரியா மோகன், சம்மி, ஸ்ரீதர் அடங்கிய அணி 3 நிமிடம் 23.36 வினாடி நேரத்தில் ஓடி,ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனையை படைத்துள்ளனர்.இதற்கு முன் 3 நிமிடம், 26.64 வினாடியில் வந்ததே சாதனையாக இருந்தது.

ஆனால்,இதனையடுத்து நடைபெற்ற மற்றொரு தகுதிச்சுற்றில் நைஜீரிய அணி, 3:21.66 வினாடியில் வந்து புதிய சாதனை படைத்தது.இந்தியா இரண்டாவது இடம் பெற்றது.இதனைத் தொடர்ந்து,இறுதி போட்டியில் 3 நிமிடம், 20.57 வினாடி நேரத்தில் ஓடி மூன்றாம் இடத்தை பிடித்து,இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.இப்போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

முன்னதாக, இந்தியா சார்பில் பங்கேற்ற சீமா அன்டில் (வட்டு எறிதல், 2002), நவ்ஜீத் கவுர் (வட்டு எறிதல், 2014), ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், 2016), ஹிமா தாஸ் (400 மீ., ஓட்டம், 2018) இப்போட்டிகளில் பதக்கம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

3 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

3 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

4 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

4 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

7 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago