20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகளம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது.
கென்யா தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 4*400 மீ., கலப்பு தொடர் ஓட்ட தகுதிச்சுற்றில் இந்தியாவின் கபில், பிரியா மோகன், சம்மி, ஸ்ரீதர் அடங்கிய அணி 3 நிமிடம் 23.36 வினாடி நேரத்தில் ஓடி,ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனையை படைத்துள்ளனர்.இதற்கு முன் 3 நிமிடம், 26.64 வினாடியில் வந்ததே சாதனையாக இருந்தது.
ஆனால்,இதனையடுத்து நடைபெற்ற மற்றொரு தகுதிச்சுற்றில் நைஜீரிய அணி, 3:21.66 வினாடியில் வந்து புதிய சாதனை படைத்தது.இந்தியா இரண்டாவது இடம் பெற்றது.இதனைத் தொடர்ந்து,இறுதி போட்டியில் 3 நிமிடம், 20.57 வினாடி நேரத்தில் ஓடி மூன்றாம் இடத்தை பிடித்து,இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.இப்போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
முன்னதாக, இந்தியா சார்பில் பங்கேற்ற சீமா அன்டில் (வட்டு எறிதல், 2002), நவ்ஜீத் கவுர் (வட்டு எறிதல், 2014), ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், 2016), ஹிமா தாஸ் (400 மீ., ஓட்டம், 2018) இப்போட்டிகளில் பதக்கம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…