20 ஓவர் போட்டியில் இந்த 3 வீரர்கள் இரட்டை சதம் அடிப்பார்கள்.! யுவராஜ் சிங்கின் லிஸ்ட்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • 20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங்  தெரிவித்துள்ளார். இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் தற்போது அதிரடியாக விளையாடி வருவதை பார்த்தால் எதுவும் சாத்தியமில்லை என கூற முடியாது என தெரிவித்தார்.

இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங் கடந்த ஆண்டு அனைத்து விதமான  போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 போட்டிகளில் விளையாடினார். தற்போது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயிக்கு நிதி திரட்டும் வகையில், நடைபெற்ற புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங் கலந்துகொண்டு விளையாடினார். கடந்த 2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார். மேலும், 20 ஓவர் சர்வதேச போட்டியில் 12 பந்தில் அரை சதத்தை அடித்து சாதனை புரிந்தார்.

இந்நிலையில், 20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங் தற்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் இவர்கள் மூவரும் டி20 போட்டியில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்புள்ளது, ஆனால் இதில் இருவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர் என தெரிவித்தார். மேலும், 20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்று என்னால் சொல்ல முடியும். தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை பார்க்கும் போது முடியாதது எதுவுமில்லை, அதனால் காத்திருப்போம் என்றும் சிறந்ததை எதிர்பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

16 minutes ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

48 minutes ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

59 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

1 hour ago

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

2 hours ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

2 hours ago