கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழகத்தை சார்ந்த 8 அணிகள் கலந்து கொண்டன. அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்றது. இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
டிஎன்பிஎல் தொடர் முடிந்த பின் சில வீரர்கள், ஒரு பயிற்சியாளர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு இருந்ததாக செய்திகள் வெளியானது.அதைத் தொடர்ந்து பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்த அஜித் சிங் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்தினர்.அதன் பின் எந்தவித செய்தியும் வெளியாகாத இருந்த நிலையில் கங்குலி சில நாட்கள் முன்பு டிஎன்பிஎல் தொடரில் இரு அணிகள் தடை செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால், அது உண்மை இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் திண்டுக்கல்லில் தூத்துக்குடி மற்றும் மதுரை அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியின் போது 225 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த இரு அணிகளையும் தகுதி நீக்கம் செய்ய பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…