#Tokyo 2020 Paralympic Games: டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

Published by
பாலா கலியமூர்த்தி

மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்று திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது. இன்று தொடங்கி உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5 வரை நடைபெறுகிறது.

இதனிடையே, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஒரு தங்கம் 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என இந்தியா 7 பதக்கங்களை வென்றது என்பது அனைவரும் அறிந்தது.

இந்த நிலையில், 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், இந்தியா சார்பில், இதுவரை இல்லாத அளவுக்கு தடகளம், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட ஒன்பது வகையான விளையாட்டுகளில், 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில், 5 வீரர்கள் மற்றும் 6 அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்றும், 2016 பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டியிருந்தது.

164 நாடுகளை சேர்ந்த 4500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று ஜப்பானில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டோக்கியோ ஒலிம்பிக் போல் பாரா ஒலிம்பிக்கிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும், பாரா ஒலிம்பிக் போட்டியில் தகுதிச்சுற்றுகள் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27-ஆம் தேதிகளிலும், காலிறுதி மற்றும் இறுதிப்போட்டி முறையே ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் மாரியப்பன் தொடர்பில் இருந்ததால், மாரியப்பனுக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் தேக்சந்த் தேசிய கொடி ஏந்தி சென்றார். மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

30 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

48 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago