பாரிஸ் ஒலிம்பிக் : ஓய்வை அறிவித்த டாம் டேலி..! மகனுக்காக மீண்டும் விளையாடி பதக்கம் வென்று அசத்தல்!!

Published by
அகில் R

பாரிஸ் ஒலிம்பிக் : உலக நாடுகள் பங்கேற்று விளையாடும் ஒலிம்பிக் தொடரின் 33-வது தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் நடைபெற்று வருகிறது. பல வீரர், வீராங்கனைகள் பதக்கங்களுக்காக தங்கள் நாட்டை நிலை நிறுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

அதன்படி, கடந்த 15 வருடங்களாக ஒலிம்பிக் போட்டிகளில் ஒலிக்கும் பெயர் தான் டாம் டேலி. பிரிட்டன் நாட்டை சேர்ந்த இவர் தனது 14 வயதில் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கினார். கடந்த 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்ஸ் தொடரில் 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் களமிறங்கி தனி பிரிவில் விளையாடி 7 ஆம் இடம் பிடித்தார்.

அதன் பின் தொடர்ச்சியாக 2011-ம் ஆண்டு தன்னுடைய தந்தை இறந்த நேரத்திலும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் போது 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

அதன் பின் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் தொடரின் 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் அணி பிரிவில் வெண்கலமும், 2020-ல் நடந்த ஒலிம்பிக்கில் அணி பிரிவில் தங்கமும், தனி வீரர் பிரிவில் வெண்கலமும் வென்றார்.

2013-ம் ஆண்டு லான்ஸ் பிளாக் என்ற ஆணை திருமணம் செய்தார். இதனால் மிகவும் பிரபலம் ஆனார். தற்போது வாடகைத்தாய் மூலமாக இவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். அதன் பிறகு கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு பின் ஓய்வை அறிவித்துவிட்டு அவரது குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

அதன்பின் தனது சமூக வலைதளத்தில் ஒலிம்பிக் வீரராக உருவாகுவது எவ்வளவு கடினம் என்ற வீடியோவை பார்த்து கொண்டு இருக்கையில், அவரது மகன் ‘உங்களை மீண்டும் ஒலிம்பிக்கில் பார்க்க வேண்டும்’ என கூறி இருக்கிறார்.

இதனாலேயே 1 வருடம் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்ட இவர் 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்று அசத்தி உள்ளார். இதனாலே இந்த சம்பவம் சற்று வியப்படையும் ஒன்றாக பார்க்கப்படுகிறது என்றே கூறலாம்.

Published by
அகில் R

Recent Posts

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

59 minutes ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

2 hours ago

காசா கடற்கரை உணவகத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை வான்வழி தாக்குதல்…22 பேர் பலி!

காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…

2 hours ago

திருப்புவனம் : அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் – பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

2 hours ago

இங்கிலாந்தை வீழ்த்த கெவின் பீட்டர்சன் கொடுத்த டிப்ஸ்…உண்மையை உளறிய குல்தீப் யாதவ்!

பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…

3 hours ago

குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்!

டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…

3 hours ago