பாரிஸ் ஒலிம்பிக் : நாளை 9-ஆம் நாள் ..! இந்திய அணியின் போட்டிகள் என்னென்ன?

Published by
அகில் R

பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் போட்டியின் நாளைய 9-வது நாளில்  இந்திய அணியின் போட்டிகள் என்னென்ன என்பதை இதில் பார்க்கலாம். அதற்கு முன் இன்றைய நாளில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் விளையாடினார்.

அதில் பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 4-ஆம் இடம் பிடித்ததால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். மேலும், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் மேற்கொண்டு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

இதனால் இந்த போட்டியிலும் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கலாம். தற்போது இந்திய அணியின் நாளைய போட்டிகளை பற்றி பார்க்கலாம்.

இந்திய அணியின் நாளைய போட்டிகள் : 

துப்பாக்கி சுடுதல் : 

நாளை மதியம் 12:30 மணிக்கு ஆண்களுக்கான தனிப்பிரிவில் 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் தகுதி சுற்றானது நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியின் சார்பாக விஜய்வீர் சித்து, அனிஷ் அனிஷ் விளையாடியது.

ஹாக்கி : 

நாளை மதியம் 1:30 மணிக்கு இந்தியா ஆண்கள் அணிக்கான காலிறுதி போட்டியானது நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டன் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

தடகள போட்டிகள் : 

  • நாளை மதியம் 1:30 மணிக்கு பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் சுற்று நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி சார்பாக பருல் சௌத்ரி விளையாடவுள்ளார்.
  • நாளை மதியம் 2:30 மணிக்கு ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்றானது நடைபெற உள்ளது. இதில்  இந்தியா அணியின் சார்பாக ஜெஸ்வின் ஆல்ட்ரின் கலந்து கொண்டு விளையாடவுள்ளார்.
Published by
அகில் R

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

17 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago