இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த தொடருக்கான தகுதிச்சுற்றில் விளையாடிய பிரான்ஸை சேர்ந்த டென்னிஸ் வீரர் எலியட் பெஞ்செட்ரிட் என்பவர் வாழைப்பழத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது டென்னிஸ் போட்டிகளில் பந்துகளை எடுப்பதற்காக சிலர் சேர்க்கப்படுவார்கள். பந்து எடுப்பவர்களுக்கு பெரும்பாலும் டென்னிஸ் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள், பின்னர் டென்னிஸ் அனுபவத்திற்காக அவர்கள் பந்துகளை எடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில், டென்னிஸ் போட்டியின் நடுவே ஓய்வில் அமர்ந்திருந்த போது பிரான்ஸ் வீரர் எலியட் பெஞ்செட்ரிட் சாப்பிடுவதற்கு தன்னிடமிருந்த வாழைப்பழத்தை எடுத்தார். அப்போது அங்கு பந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுமியை கூப்பிட்டு, தன்னிடமிருந்த வாழைப்பழத்தை கொடுத்து அதை உரித்து தரும்படி கேட்டுள்ளார், பின்னர் அந்த பெண் டென்னிஸ் வீரர் கேட்கிறார் என்று, நினைத்து அந்த சிறுமியும் வாங்க இதனை திடீரென கண்ட நடுவர் ஜான் ப்ளோம் உடனடியாக அந்த சிறுமியை பார்த்து பழத்தை திரும்ப அந்த வீரரிடமே அளிக்கும்படி கூறினார், அந்த சிறுமியும் உடனடியாக வீரரிடம் திரும்ப கொடுத்துவிட்டது.
பின்னர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பலரும் வீரரின் செயலுக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். சிலர் அந்த சிறுமி வீரர்களின் வேலைக்காரர்கள் இல்லை என்றும், அவரின் வேலையை மட்டும் பார்க்க விடுங்கள் என்றும், அவர்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் நடுவரின் செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…