மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது! வெற்றிக்கு பின் விராட் கோலி பேச்சு!

Published by
murugan

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது என விராட் கோலி கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் தர்மசாலா இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 10 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் மட்டும் தான் எடுத்து. இதன் காரணமாக பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி அதிரடியாக விளையாடிதன் காரணமாகவே பெங்களூர்  242 ரன்கள் எடுத்து. இந்த போட்டியில் விராட் கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து இருந்தார்.

இந்த போட்டிக்கு முன்னதாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவை அனைத்திற்கும்  இந்த போட்டியின் மூலம் பதிலடியும் கொடுத்துள்ளார். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோலி ” இந்த போட்டியில் எங்களுடைய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இந்த போட்டியில் நான் என்னால் முடிந்த அளவுக்கு சுதந்திரமாக பிடித்த ஷாட்களை விளையாடினேன்.

குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப்பை ஆடினேன். இதற்கு முன்னதாக நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாதிரி ஷாட்களை ஆடிஇருக்கிறேன். இப்போது மீண்டும் அது போல விளையாடியதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாதிரி விளையாடவேண்டும் என்றால் நான் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும், அதற்கு கொஞ்சம் நம்பிக்கை தேவை. எனக்கு இந்த போட்டியில் அது அதிகமாகவே இருந்தது.

என்னைப் பொறுத்தவரையில் அளவைவிட தரம்தான் முக்கியம் என்று நினைப்பேன். கொல்கத்தா அணிக்கு எதிராக எங்களுடைய சின்ன சுவாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்த பிறகு ரொம்பவே எங்களுடைய ரசிகர்களை ஏமாற்றிவிட்டோமோ என்று  வருத்தம் இருந்தது. அதனை தொடர்ந்து  நாங்கள் எங்களின் சுயமரியாதைக்காக விளையாட வேண்டும் என நினைத்தோம். எனவே, சரியாக விளையாடவேண்டும் கடமைக்கு விளையாடி ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. இப்போது மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது” எனவும் விராட் கோலி கூறியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago