146 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய வீரர் விராட் கோலி சாதனை..!

Published by
murugesh m

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரக விளங்கும் விராட் கோலி இந்த காலண்டர் ஆண்டில் விளையாடிய போட்டிகளின் மூலம் இவ்வாண்டில் 2000 ரன்களை கடந்தார். ஒரு வீரர் தனது காலண்டர் ஆண்டில் அதிகபட்சமாக 2000 ரன்களை கடப்பது என்பது எளிதானது அல்ல. இந்திய வீரர் விராட் கோலி இதனை ஏழாவது முறையாக நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 2012 (2186 ரன்கள்), 2014 (2286 ரன்கள்), 2016 (2595 ரன்கள்), 2017 (2818 ரன்கள்), 2018 (2735 ரன்கள்) மற்றும் 2019 (2455 ரன்கள்) ஆகிய ஆண்டுகளில் இந்த சாதனையை அவர் செய்திருந்தார். 1877ல் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் விளையாடப்பட்டதிலிருந்து (அதிகாரப்பூர்வ சாதனையின்படி) வேறு எந்த வீரரும் இந்த சாதனையை எட்டவில்லை.

2016 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 86.50 சராசரியும் 80.91 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டு 2595 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கை வீரர் குமார் சங்ககாரா ஆறு ஆண்டுகள் 2000 மேல் ரன்களை கடந்து இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் , இலங்கை வீரர் மகிலா ஜெயவர்த்தனே தலா ஐந்து முறையும் 2000 மேல் ரன்களைக் கடந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugesh m

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago