அப்போதைய கிரிக்கெட்டுக்கு இப்போதைய கிரிக்கெட்டும் உள்ள வித்தியாசம் – இன்சமாம்

Published by
பாலா கலியமூர்த்தி

20 ஓவர் போட்டியில் ரன்கள் குவிக்கப்பட்டாலும், ஆக்ரோஷம் குறைவாகத்தான் உள்ளது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அப்போதைய கிரிக்கெட்டுக்கு இப்போதைய கிரிக்கெட்டுக்கு உள்ள வித்தியாசத்தை பகிர்ந்துகொண்டார். தனக்கு ஒருமுறை சர் விவியன் ரிச்சர்ட்சனுடன் இணைந்து பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னிடம் வந்து அவர், நம் இருவரில் யார் அதிகம் தூரம் சிக்ஸர் அடிக்கிறார்கள் என்று சவால் ஒன்று வைத்துக்கொள்ளலாமா என கேட்பார். அதற்கு நானும் சிரிச்சுக்கொண்டே நிச்சியமாக என கூறினேன். நான் அப்போது மனதில் நினைத்தேன், இவர் ஓய்வு பெற்ற வீரர்தானே என அலட்சியமாக நினைத்தேன் என்று கூறினார்.

பின்னர் பேசிய அடுத்த ஓவரில் ரிச்சர்ட்சன் சிக்ஸர் அடித்தார். அந்த பந்து மைதானத்தின் வெளியே உள்ள பார்க்கிங் ஏரியாவில் விழுந்தது. இதையடுத்து நான் அடித்த சிக்ஸர் அதை தாண்டி விழுந்தது. அப்போது நான் அவரிடம் சொன்னேன், உங்களைவிட அதிகம் தூரம் முடித்துவிட்டேன் என்றேன். அதற்கு அவர் போட்டி இன்னும் முடியவில்லை விளையாடிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறிவிட்டு அடுத்தடுத்த அவர், விளாசிய சிக்ஸர்கள் மைதானத்தின் வெளியே இருக்கும் வீடுகளில் விழுந்தது என்று கூறினார் இன்சமாம்.

பின்னர் இப்போதுள்ள வீரர்களை பற்றி பேசிய இன்சமாம், சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ரிச்சர்ட்சனிடம் இருந்த பலம் என்னை வியக்கவைத்தது. அவரிடம் இருந்து தற்போது உள்ள வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆக்ரோஷமான ஆட்டம் இப்போதைய வீரர்களிடம் இல்லை என தெரிவித்தார். மேலும் 20 ஓவர் போட்டியில் ரன்கள் குவிக்கப்பட்டாலும், ஆட்டத்தில் ஆக்ரோஷம் குறைவாகத்தான் உள்ளது. வீரர்கள் விளையாடும் போது வேகம் இருந்ததால் தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

4 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

4 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

6 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

6 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

7 hours ago