ஆரம்பமாகுமா பயிற்சி.? – சிஎஸ்கேவை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ்.!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன.

உலகளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளm அதிகம் உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு 8 அணிகளை சேர்ந்த வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் அமீரகம் சென்றடைந்தனர். இதில், கடந்த 21- ம் தேதி ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டனர்.

இதையடுத்து, பரிசோதனை முடிவில் இளம் வீரரான தீபக் சாஹர், ருதுராஜ் மற்றும் ஊழியர்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து, தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நடப்பு ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி உள்ளதால் இன்று சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. மீண்டும் ஒருமுறை சோதனை நடத்தப்படும் என்றும் அதிலும் நெகட்டிவ் வந்தால் பயிற்சி ஆட்டம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

28 minutes ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

1 hour ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

2 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

3 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

10 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

11 hours ago