மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டி – இந்திய அணி 4வது அசத்தல் வெற்றி!

Published by
பாலா கலியமூர்த்தி

மகளிருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் ஸ்டேடியத்தில் அக்டோபர் 27ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டி நவம்பர் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பாக செயல்பட்டு தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் இந்தியா 2-1 கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இதனைத்தொடர்ந்து நடப்பு சாம்பியனான ஜப்பானை நேற்று இரவு இந்திய ஹாக்கி மகளிர் எதிர்கொண்டது. இப்போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

2023 பலோன் டி’ஓர் விருது : சிறந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி.!

இந்த நிலையில், நேற்றிரவு நடந்த போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில், நவ்னீத் கவுர் (31-வது நிமிடம்) சங்கீதா குமாரி (47-வது நிமிடம்) கோல் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டியில் தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மேலும், நடப்பு சாம்பியன் ஜப்பான் ஹாக்கி மகளிர் அணி 3 வெற்றி, ஒரு தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அணி ஏற்கனவே அரை இறுதியை எட்டிவிட்ட நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை நாளை சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

11 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

11 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

11 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

13 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago