சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று காலை நடந்த மிகுந்த பரிதாபமான விபத்தில், பள்ளி வேன் ஒன்று ரயிலுடன் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், பள்ளி வேன் ரயில்வே கேட் இல்லாத பாதையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் தேஹ்ரி கர்வால் எனுமிடத்தில் பள்ளி வேன் ஒன்று பாலத்தின் மீது செல்கையில் திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் மீதிருந்த தடுப்பு சுவரை இடித்து பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த வேனிற்குள் ஓட்டுநர் உட்பட 18 பேர் இருந்துள்ளனர். இந்த கோர சம்பவத்தில் 7 மாணவர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் பேரிடர் குழுவால் மீட்கபட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.