AI மனிதர்களுக்கு முழுமையான மாற்றாக அமைய முடியாது..! ஆப்பிள் இணை நிறுவனர்

Published by
செந்தில்குமார்

செயற்கை நுண்ணறிவு, மனிதர்களுக்கு முழுமையான மாற்றாக அமைய முடியாது என ஆப்பிள் இணை நிறுவனர் கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு:

செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களுக்கு முழுமையான மாற்றாக அமைய முடியாது, ஏனெனில் அதில் உணர்ச்சிகள் கிடையாது என்று ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் கூறினார். செயற்கை நுண்ணறிவு என்பது பொதுவாக இந்த தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்துவிடுகிறது. இவற்றில் ஒன்றுதான் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ChatGPT என்பதாகும்.

மனிதர்களுக்கு மாற்று :

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக், செயற்கை நுண்ணறிவு குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவால் எந்த நேரத்திலும் மனிதர்களுக்கு முழுமையான மாற்றாக அமைய முடியாது, ஏனெனில் அதற்கு உணர்ச்சிகள் கிடையாது. இருப்பினும், ChatGPT போன்ற AI, மிகவும் நம்பகத்தன்மையுடைய உரைகளை உருவாக்குவதால் ஹேக்கர்கள் மற்றும் சைபர் தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு மக்களின் தரவுகளை எளிதில் கையாள முடியும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தை நிறுத்த முடியாது:

மேலும், AI ஆல் உருவாக்கப்படுகின்ற ஓவ்வொன்றிற்கும் மனிதர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அதாவது, AI ஆல் உருவாக்கப்பட்ட உரைகள், செயலிகள் போன்றவற்றை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதால், அதை வெளியிடும் நபர் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கவேண்டும். தொழில்நுட்பத்தை எங்களால் நிறுத்த முடியாது, ஆனால் தனிப்பட்ட தரவை மீறும் மோசடிகள் மற்றும் தீங்கிழைக்கும் முயற்சிகளைக் கண்டறிய பயனர்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். என்று வோஸ்னியாக் தெரிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

4 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

5 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

5 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

6 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

7 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

8 hours ago