google trending list [file image]
இந்தியா மட்டுமில்லாமல் உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14 தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆக.23ம் தேதி, சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்ஞான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டது.
விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கி பல தகவலை பூமிக்கு அனுப்பியது. இந்த நிகழ்வு ஒரு வரலாற்று சாதனையாக அமைந்தது. நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறங்கிய பட்டியலில் இந்தியா தனது பெயரை பொறித்தது. அதுமட்டுமில்லாமல், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா அடைந்தது.
இந்த சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர் மற்றும் ரோவர்’ கருவிகளை ஏந்தி சென்ற, ‘ப்ரொபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்துவிசை கலன் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்தது. இந்தியா எதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியதோ, அது வெற்றிகரமாக முடிவடைந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றி பெற்ற சந்திரயான்-3 இந்த வருடம் உலக முழுவதும் பேசப்பட்டது.
AI மூலம் உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம்.! எப்படினு பாப்போமா.?
இந்த நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் சந்திரயான் – 3 விண்கலம் முதலிடம் பிடித்துள்ளது. கூகுள் இந்தியா நிறுவனம் அதன் வலைதளத்தில் அதிகமானோர் தேடிய ‘டாப் – 10’ தகவல்களின் பட்டியலை ஆண்டுதோறும், அந்த ஆண்டு நிறைவு பெறும்போது வழக்கமாக வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில், கூகுள் இந்தியா நிறுவனம் அதன் வலைதளத்தில் அதிகமானோர் தேடிய தகவல்கள் தொடர்பான 2023ம் ஆண்டுக்கான டாப் 10 பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, 2023ம் ஆண்டில் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்த விஷயங்களின் பட்டியலை தேடல் நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ளது.
அதில், நிலவில் சந்திராயன் 3 விண்கலத்தை தரையிறக்கி சரித்திரம் படைத்தது குறித்து தான் அதிகளவில் தேடப்பட்டு, தகவல் பகிர்வு உள்ளிட்டவற்றில் முதலிடம் பிடித்துள்ளது. கூகுளால் அதிகம் பகிரப்பட்ட தரவு, அதிகம் தேடப்பட்ட செய்தி தலைப்பு சந்திரயான் -3 தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…