தொழில்நுட்பம்

HDVideo: போட்டோ மட்டும் இல்ல வீடியோவையும் எச்டியில் அனுப்பலாம்..! வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய அம்சம்.!

Published by
செந்தில்குமார்

வாட்ஸ்அப் ஆனது தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், வாட்ஸ்அப் செயலில் எச்டி புகைப்படங்களை அனுப்பமுடியும் என்றும், விரைவில் எச்டி வீடியோவையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, புகைப்படங்களை எச்டியில் அனுப்பும் அம்சம் அறிமுகமானது. இதே போல வீடியோவிலும் அறிமுகமாகும் என்று கூறப்பட்ட நிலையில், அதுவும் அறிமுகமாகியுள்ளது. இனி புகைப்படங்களை மட்டுமல்லாமல் வீடியோவையும் எச்டியில் அனுப்பலாம். இதற்கு முதலில் நீங்கல் அனுப்ப நினைக்கும் புகைப்படம் அல்லது வீடியோ எச்டியில் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்த போட்டோ அல்லது வீடியோவை செலக்ட் செய்ய வேண்டும். பிறகு மேல் புறத்தில் இருக்கும் வசதிகளில் எச்டி என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு இரண்டு தேர்வுகள் வரும். அதில் எந்த அளவு தெளிவுடன் அந்த வீடியோ அல்லது புகைப்படத்தை அனுப்ப வேண்டும் என்று செலக்ட் செய்து விட்டு, ஒகே என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் அனுப்பும் வீடியோ அல்லது புகைப்படம் அல்லது எச்டியில் இருக்கும்.

மேலும், சமீபத்தில் பல புதிய அப்டேட்களை வெளியிட்டது. அதில் வீடியோ மெசேஜ், சைலன்ஸ் அன்நோன் நம்பர்ஸ், குரூப் வீடியோ கால், மெசேஜ் எடிட், வாய்ஸ் சேட், ஸ்கிரீன் ஷேரிங் போன்ற அம்சங்கள் அடங்கும். இதற்கிடையில் வேறு சில அம்சங்களையும் சோதித்து வருகிறது. அந்தவகையில், ஒரு மொபைல் போனில் பல வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை விரைவில் வெளியிடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago