SelfServiceRepair [Image Source : Gizbot]
கடந்த 2022ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் மற்றும் மேக் போன்றவற்றை பயனர்களே சரி செய்து கொள்ளும் ‘செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் எஸ்இ போன்ற மாடல்களுக்கு மட்டுமே இந்த திட்டம் இருந்தது. பிறகு ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்கள் வரை விரிவுபடுத்தியது.
இப்போது, செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் திட்டத்தை 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ, 15 இன்ச் மேக்புக் ஏர், மேக் மினி, மேக் ப்ரோ, மேக் ஸ்டுடியோ மற்றும் ஐபோன் 15 சீரிஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. அதேபோல, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற 9 நாடுகளில் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டது.
இனி குரோஷியா, டென்மார்க், கிரீஸ், நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட 24 ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆப்பிள் பயனர்களுக்கும் ஆப்பிளின் செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் சேவை கிடைக்கிறது. இதன்மூலம் செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் சேவையானது இப்போது 33 நாடுகள் மற்றும் 24 மொழிகளில் மொத்தமாக 35 ஆப்பிள் தயாரிப்புகளுக்குக் கிடைக்கிறது.
இது கூடவே ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய பயன்பாட்டையும் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். Apple Diagnostics என்கிற இந்த பயன்பாட்டின் மூலம் பயனர்கள் தங்கள் சாதனங்களில் எந்தெந்தப் பகுதிகளைச் சரிசெய்ய வேண்டும் என்பதைக் கண்டறிய முடியும்.
ஆப்பிள் தங்களது சாதனைகளை பயனர்களே சரி செய்து கொள்ளும் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை. வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்படலாம். இத்திட்டத்தின் கீழ், பயனர்கள் பழுதுபார்ப்பதற்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களையும், அதனை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விளக்க குறிப்புகளையும் ஆப்பிள் வழங்குகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…