Whatsapp Spam Call [ImageSource- Twitter/mashable]
சர்வதேச ஸ்பேம் அழைப்புகள் குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அரசு நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
கடந்த சில நாட்களாகவே, வாட்ஸ்அப் பயனர்கள் பலருக்கும் எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற சர்வதேச நாடுகளின் மொபைல் எண்களிலிருந்து அழைப்புகள் வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
உலகளவில் பெரும்பாலான பயனர்களால் வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் செய்திகளை பரிமாறிக்கொள்வதோடு, மக்கள் எந்த நாட்டிலிருந்தும் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் அழைப்புகளைச் செய்துகொள்ள முடியும். இந்த வசதி மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் எளிதான வழியாக மாறியுள்ளது.
எனவே, இதைப்போல வெளிநாடு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்கவேண்டாம். இதனால் மோசடி செய்பவர்கள் பயனரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவதற்காக பயனர்களின் ரகசிய தகவலை பெற முயற்சி செய்கிறார்கள். ஆகவே, இதுபோல ஏதெனும் சைபர் தாக்குதலை எதிர்கொண்டால், அதனை cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று மத்திய உள்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இதனையடுத்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பயனர்களுக்கு வரும் சர்வதேச ஸ்பேம் அழைப்புகள் தொடர்பான பிரச்சனை குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளது என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும், நாங்கள் ஏற்கனவே வாட்ஸ்அப் நிறுவனத்திடம் எங்களது கேள்விகளை கேட்டுளோம் என்றும் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது வாட்ஸ்அப் நிறுவனத்தின் பொறுப்பாகும். ஒரு சிக்கல் என்னவென்றால், இந்த எண்கள் எவ்வாறு வெளியேறுகின்றன என்பது இன்னமும் தெரியவில்லை, என்று சந்திரசேகர் கூறியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…