LavaYuva3Pro [Image source : Lava]
இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா (Lava), கடந்த பிப்ரவரி மாதம் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர் மற்றும் 5,000mAh உடன் லாவா யுவா 2 ப்ரோ (Lava Yuva 2 Pro) ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது இதே யுவா சீரிஸில் லாவா யுவா 3 ப்ரோ (Lava Yuva 3 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன் அறிமுகத்தை உறுதி செய்து அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள டீசரில், லாவா யுவா 3 ப்ரோ ஆனது டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. அந்த டீசரில் போனின் பேனலின் இடதுபுறம் மேல்பக்கத்தில் எல்இடி பிளாஷுடன் செவ்வக வடிவில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது தெரிகிறது.
இதற்கிடையில் அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை போன்றவை சமூக ஊடகங்களில் கசிந்துள்ளன. அந்த கசிவுகளின் படி, லாவா யுவா 3 ப்ரோவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 பஞ்ச் ஹோல் எச்டி+ டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1) உடன் யூனிசோக்கின் டி616 (UNISOC T616) பிராஸசர் பொருத்தப்படலாம். இது ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படுகிறது. கேமராவைப் பார்க்கையில் 50 எம்பி ஏஐ டூயல் கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் பொருத்தப்படலாம். யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் 18 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி இருக்கலாம்.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம். கோல்டன், பச்சை மற்றும் ஊதா ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியாகும் இந்த போன், ரூ.10,999 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம். லாவா யுவா 3 ப்ரோ ஆனது ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…