தொழில்நுட்பம்

OpenAI CEO சாம் ஆல்ட்மேன் பணிநீக்கம்.! இணை நிறுவனர் ராஜினாமா..அடுத்தடுத்து அதிர்ச்சி.!

Published by
செந்தில்குமார்

ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நமது உலகில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் டெக்னாலஜி என்பது அதிக அளவில் வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்த டெக்னாலஜி உலகையே புரட்டிப்போடும் விதமாக சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, ஒரு புதிய சாட்போட்டைக் கண்டுபிடித்தது.

அதுதான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ‘சாட் ஜிபிடி (Chat GPT)’ ஆகும். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சாட் ஜிபிடி, அறிமுகமான சில வாரங்களிலேயே பத்து லட்சம் பயனர்களை ஈர்த்தது. தொழில், கல்வி என பலத்துறைகளில் புரட்சியை ஏற்படுத்திய  சாட் ஜிபிடி, கவிதைகள், கட்டுரைகள் முதல் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்கள் வரை எழுதித் தரக்கூடிய திறன் கொண்டது.

இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு, 2021ம் ஆண்டிற்கு முன்பு உள்ள தகவலின் அடிப்படையில் இணையத்தில் ஆராய்ந்து பதில் தரக்கூடியது. இதனால் மனிதன் செய்யக்கூடிய வேலைகள் பாதியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு வேலைகள் இல்லாமல் கூடப் போகலாம் என்ற நிலை ஏற்படலாம்.

மிரட்டும் டிசைன்..12 ஜிபி ரேம்.. 50 எம்பி கேமரா.! அறிமுகமாகிறது ஒப்போ ரெனோ 11 சீரிஸ்.!

மேலும், சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஏஐ சாட் போட்களை வெளியிட்டன. பல தொழிநுட்ப நிறுவனங்கள் புதிய ஏஐ-ஐ உருவாக்குவதில் ஈடுபட்டன. இருந்தும் சாட் ஜிபிடிக்கு இணையாக வர முடியவில்லை. இந்நிலையில், அதிர்ச்சித் தரக்கூடிய ஒரு தகவலை ஓபன் ஏஐ நிறுவனம் வெளிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் AI சாட் போட்.! மெட்டா நிறுவனம் அசத்தல்.!

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாம் ஆல்ட்மேனின் நிர்வாக குருவிடம் ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனையில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழு உடனான தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாக இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.

எனவே, சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி நீக்கும் முடிவை எடுத்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தலைமை நிர்வாகி அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

1 hour ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

2 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

2 hours ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

3 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

3 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

4 hours ago