தொழில்நுட்பம்

ஒரே போனில் இரண்டு கணக்குகள்..! விரைவில் அறிமுகமாகும் வாட்ஸ்அப்பின் அசத்தல் அம்சம்..!

Published by
செந்தில்குமார்

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே கணக்கை பல தொலைபேசிகளில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் வாட்ஸ்அப் செயலி மற்றும் இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் சாட் செய்வது மட்டுமல்லாமல் வீடியோக்கள் மற்றும் புகை படங்களை பகிர்ந்து கொள்வதோடு பண பரிமாற்றத்தையும் மேற்கொள்கின்றனர்.

மெட்டாவின் வாட்ஸ்அப், பயனர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மல்டி அக்கவுண்ட் சப்போர்ட் எனப்படும் ஒரே மொபைலில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சத்தை கொண்டு வர உள்ளது.

முன்னதாக, ஒரு வாட்ஸ்அப் கணக்கை நான்கு சாதனங்களில் பயன்படுத்துவதற்கான அம்சத்தை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்த அம்சம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சமானது முதலில் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு சோதனைக்காக விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது இந்த அம்சம் சோதனையில் உள்ளதாக கூறப்படுகிறது

வெளியாகி உள்ள தகவலின்படி, வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு புதிய மெனு மூலம் பயனர்கள் இரண்டு கணக்குகளை ஒரே சாதனத்தில் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களது தனிப்பட்ட வாட்ஸ்அப் மற்றும் வேலைக்காக உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப் கணக்கு என இரண்டு கணக்குகளையும் ஒரே சாதனத்தில் வைத்துக் கொள்ள முடியும். இதனால் வேறு சில செயலிகளின் பயன்பாடுகளை நாம் தவிர்க்கலாம்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

4 minutes ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

11 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago