தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் AI சாட் போட்.! மெட்டா நிறுவனம் அசத்தல்.!

Published by
செந்தில்குமார்

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களுக்காக அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம் போன்றவற்றை அறிமுகம் செய்தது.

இதனை தொடர்ந்து தற்பொழுது வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலமாக இயங்கக்கூடிய சாட் பாட்டை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா ஏஐ எனப்படும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை, நிறுவனம் அதன் பல்வேறு தளங்களில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இனி ஐபோன்களில் ஆர்சிஎஸ் மெசேஜ் வசதி.! ஆப்பிள் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு.!

இந்த ஏஐ சாட் பாட்டை அனுகுவதற்கு வண்ணமயமான மற்றும் பயனர்களின் கண்ணை கவரும் வகையில் ஒரு ஷார்ட்கட் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஷார்ட் கட், மெசேஜ் ஐகானுக்கு மேலே வட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கிளிக் செய்தவுடன் பயனர்களுக்கு பல சிறப்பான அனுபவங்களை வழங்கும் ஏஐ சாட் பாட்டின் வரவேற்பு உரை தோன்றும்.

இதன்பிறகு அதில் உரையாடலை தொடங்கலாம். இந்த அம்சம் மூலம் நீங்கள் உங்களுக்காக ஒரு சேட்டை தொடங்குவதற்கான நேரமானது கணிசமாக குறைக்கப்படும். இந்த அம்சம் இன்னும் மேம்படுத்தப்பட்டு கொண்டு இருப்பதால், தற்பொழுது குறைந்த எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

ஏஐ ஸ்டிக்கர் டூல் முதல் ஃபில்டர்ஸ் வரை.! புதிய அம்சங்களை வெளியிட்ட இன்ஸ்டாகிராம்.!

மேலும் வரும் வாரங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் என அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும். வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து இந்த ஏஐ சாட் பாட் அம்சம் மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் சமீபத்திய தயாரிப்பான ரே-பான் மெட்டா ஸ்மார்ட்கிளாஸ் உட்பட அனைத்து தளங்களிலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

33 minutes ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

1 hour ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

1 hour ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

2 hours ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

2 hours ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

2 hours ago