PinMessages [Image Source : WhatsApp]
மிகவும் பிரபலாமான மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப், தனது பயனர்களை தக்கவைக்கவும், புதிய பயனர்களை தன்வசம் ஈர்க்கவும் வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‘சேனல் அலெர்ட்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
இப்போது அடுத்த அம்சமாக அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மெசேஜை பின் (Pin Message) செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் ஒரு தனிப்பட்ட நபரின் சாட்டிலோ அல்லது குரூப் சாட்களிலோ இருக்கக்கூடிய மெசேஜை பின் செய்து வைக்க முடியும்.
இதில் டெக்ஸ்ட், போட்டோஸ் மற்றும் எமோஜிகள் உட்பட அனைத்து வகையான மெசேஜ்களையும் பயனர்களை பின் செய்ய முடியும். ஒரு மெசேஜை 24 மணி நேரம், 7 நாள் அல்லது 30 நாட்கள் வரை உங்களது சாட்டில் பின் செய்து வைத்திருக்க முடியும். இதனால் உங்கள் நண்பருக்கு நீங்கள் அவர் மறந்து விடக்கூடாது என நினைக்கும் மெசேஜை பின் செய்து வைக்கலாம்.
இது நினைவு படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாட்ஸ்அப் குரூப்பை பொருத்தவரை, குரூப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒரு மெசேஜை பின் செய்யலாமா வேண்டாமா என்பதை குரூப்பின் அட்மின்கள் தேர்வு செய்ய முடியும். இப்போது ஒரு நேரத்தில் ஒரே ஒரு மெசேஜ் மட்டுமே பின் செய்ய முடியும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட செய்திகளை பின் செய்வதற்கான முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த அம்சம் குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. வரும் காலங்களில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…