இனி வாட்ஸ்அப்பில் மெசேஜை Pin செய்யலாம்.! எப்படி தெரியுமா.?

Published by
செந்தில்குமார்

மிகவும் பிரபலாமான மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப், தனது பயனர்களை தக்கவைக்கவும், புதிய பயனர்களை தன்வசம் ஈர்க்கவும் வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‘சேனல் அலெர்ட்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

இப்போது அடுத்த அம்சமாக அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மெசேஜை பின் (Pin Message) செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் ஒரு தனிப்பட்ட நபரின் சாட்டிலோ அல்லது குரூப் சாட்களிலோ இருக்கக்கூடிய மெசேஜை பின் செய்து வைக்க முடியும்.

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்புவது எப்படி.? முழு விவரம் இதோ.!

இதில் டெக்ஸ்ட், போட்டோஸ் மற்றும் எமோஜிகள் உட்பட அனைத்து வகையான மெசேஜ்களையும் பயனர்களை பின் செய்ய முடியும். ஒரு மெசேஜை 24 மணி நேரம், 7 நாள் அல்லது 30 நாட்கள் வரை உங்களது சாட்டில் பின் செய்து வைத்திருக்க முடியும். இதனால் உங்கள் நண்பருக்கு நீங்கள் அவர் மறந்து விடக்கூடாது என நினைக்கும் மெசேஜை பின் செய்து வைக்கலாம்.

இது நினைவு படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாட்ஸ்அப் குரூப்பை பொருத்தவரை, குரூப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒரு மெசேஜை பின் செய்யலாமா வேண்டாமா என்பதை குரூப்பின் அட்மின்கள் தேர்வு செய்ய முடியும். இப்போது ஒரு நேரத்தில் ஒரே ஒரு மெசேஜ் மட்டுமே பின் செய்ய முடியும்.

இனிமேல் ஒருமுறைதான் கேட்க முடியும்.! வாட்ஸ்அப்பின் புதிய பாதுகாப்பு அம்சம்.!

ஒன்றுக்கும் மேற்பட்ட செய்திகளை பின் செய்வதற்கான முயற்சியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த அம்சம் குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. வரும் காலங்களில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

மெசேஜை எப்படி பின் செய்வது.?

  • முதலில் ஒரு சாட்டை திறக்க வேண்டும்.
  • அந்த சாட்டில் நீங்கள் பின் செய்ய நினைக்கும் மெசேஜை தேர்வு செய்து, நீண்ட நேரம் கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு வலதுபுறம் இருக்கக்கூடிய மூன்று புள்ளிகள் மெனுவை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பின் (Pin) என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன்பிறகு மெசேஜை எத்தனை நாள் பின் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். (24 மணி நேரம், 7 நாள், 30 நாள்)
  • இப்போது நீங்கள் தேர்வு செய்த மெசேஜ் அந்த சாட்டில் பின் செய்யப்பட்டிருக்கும்.
Published by
செந்தில்குமார்

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

3 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

4 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

5 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

6 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

6 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

7 hours ago