கொரோனாவை வென்று வீடு திரும்பிய 100 வயது மூதாட்டி!

Published by
Surya

இந்தோனேசியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி, தற்பொழுது தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு, வீடு திரும்பினார்.

இந்தோனேசியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வரும் நிலையில், அந்நாட்டில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 1613 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியா, சுராபயா நகரை சேர்ந்த 100 வயதான கம்திம் என்பவருக்கு கடந்த மாதம் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்தனர்.

இந்நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் கொரோனாவை தன்னம்பிக்கையுடன் எதிர்த்து போராடி, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸ், முதியவர்களை குறிவைத்து தாக்கும் நிலையில், அந்த மூதாட்டி, பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், கொரோனா பாதித்த பின்பும் அவர் மன உறுதியுடன் காணப்பட்டதாகவும், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, மருந்துகளை சரிவர எடுத்து கொண்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதனையறிந்த கிழக்கு ஜாவா ஆளுநர், மூதாட்டிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

12 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago