காங்கோ ஏரியில் படகு கவிழ்ந்ததால் அதிலிருந்த சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. இதன் கிழக்கு பகுதியில் டான்கன்யிகா மாகாணத்தில் பிரபல டான்கன்யிகா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி மிகவும் பிரபலமாகும் என்பதால் நேற்று முன்தினம் 80க்கும் மேற்பட்ட பேர் படகு சவாரியில் ஈடுபட்டுள்ளனர்.
படகு ஏரியில் மையத்தில் சென்ற பிறகு படகு கவிழ்ந்துள்ளது. இதன் காரணத்தால் படகில் உள்ள அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். அந்த சமயத்தில் இதன் அருகில் ஒரு படகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் இதனை கண்டு இவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது நீரில் தத்தளித்து கொண்டிருந்த 76 பேர் மீட்கபட்டுள்ளனர். மேலும் சிறுவர்கள் உட்பட இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்த விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…