இங்கிலாந்தில், பக்கிங்ஹாம்ஷையரின் அய்லெஸ்பரி எனுமிடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழங்கால பொருட்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வந்தனர். அப்போது அவர்களுக்கு ஓர் குழியில் நீர் உள்ள இடத்தில் நான்கு கோழி முட்டைகள் கிடைத்தன. அவைகள் 1,700 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த முட்டை ரோமானியர்கள் காலத்தில் புழங்கப்பட்ட கோழிமுட்டை என கூறப்பட்டுள்ளது. அதனுடன் கூடைகளில் ரோமானியர்கள் புழங்கிய சில பொருள்கள் இருந்துள்ளன. டஜன் கணக்கில் நாணயங்கள், காலணி, மறக்கருவிகள் இருந்துள்ளன. ரோமானியர்கள், பாதாள உலக கடவுளுக்காக இப்படி கூடைகளில் பொருட்களை வைத்து வீசி சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கண்டுபிடித்த 4 முட்டைளில் மூன்று முட்டைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எடுக்கும்போது உடைந்துவிட்டது. அதனால் அங்கு பெரிய துர்நாற்றம் வீசியதாம். மீதமுள்ள ஒரு முட்டையை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். இதே போல இங்கிலாந்தில் உள்ள ரோமானியர்களின் கல்லறைகளில் கோழி எலும்பு கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரோமானியர்கள் கோழி முட்டை மீது, அடுத்த ஜென்மம் மற்றும் கருவுறுதல் தொடர்பான நம்பிக்கை வைத்து இருந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…