ஐஸ்லாந்தில் ஒரே வாரத்தில் 17,000 முறை நிலநடுக்கம்.!

Published by
Ragi

ஐஸ்லாந்து நாட்டில் ஒரு வாரத்தில் 17,000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்குப் பிராந்தியங்களில் ஒரு சிறிய எரிமலை வெடிப்பு ஏற்பட சாத்தியங்கள் உள்ளதாக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.ஏனெனில் கடந்த 8 நாட்களில் ஐஸ்லாந்தின் தென்மேற்கு பிராந்தியமான ரெய்க்ஜேன்ஸில் சுமார் 17,000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ,எனவே கடந்த 8 நாட்களில் 24 மணி நேரமும் பூமி அசைவதை உணர முடிந்ததாகவும் தலைநகர் ரெய்காவிக் குடியிருப்பாளர் தெரிவித்துள்ளார்.

எனவே ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையம்,கெய்லிர் மலைக்கு அருகில் எரிமலை வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மலையை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.பொதுவாக ஆண்டுக்கு 1,000 முறை மட்டுமே ஐஸ்லாந்து நாடு நிலநடுக்கத்தால் பாதிக்க்கப்படும்.ஆனால் கடந்த 8 நாட்களில் 17,000 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

38 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago