நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த புகைப்படம் ஒரு ஆண்டுகள் ஆனதால் இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு 14 ஆம் தேதி திரையரங்குகளில் 50% இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நெய்வேலியில் நடைபெற்று வந்தபோது, வருமான வரி சோதனையினர் நடிகர் விஜயின் வீட்டில் சோதனையிட்டனர். அதற்குப் பிறகு நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்.வருமான வரி சோதனை முடிந்த பிறகு மாஸ்டர் படப்பிடிப்புக்காக விஜய் நெய்வேலிக்கு வந்த போது அவரைபார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள்.
இதனை பார்த்த நடிகர் விஜய் அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி தனது ரசிகர்களுடன் புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை தற்போது வரை 4 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ் பெற்றுள்ளது மேலும் இந்த புகைப்படம் எடுத்து ஒரு ஆண்டுகள் ஆனதால் இதனை விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் #1YearOfMasterSelfie என்ற ஹாஸ்டேக்கை வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…