போலி ஆவணங்களை வைத்து ரூ.2.70 கோடி மோசடி செய்துவிட்டதாக விஷ்ணு விஷால் தந்தை மீது நடிகர் சூரி புகார் அளித்துள்ளார்.
நடிகர் சூரியுடன் நடிகர் விஷ்ணு விஷால் வீர தீர சூரன் எனும் தமிழ் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் இருவரும் நட்பிலிருந்து வந்தனர். இந்நிலையில் விஷாலின் தந்தை அந்நேரத்தில் டிஜிபியாக இருந்ததால் அவரது தந்தை ரமேஷ் குடவாலாவை சூரிக்கு விஷ்ணு விஷால் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து நிலம் வாங்க வேண்டுமென சூரி ரமேஷிடம் கேட்டதால் சிறுசேரியில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி தருவதாக 3 கோடியே 10 லட்சம் ரூபாயை விஷ்ணு விஷாலின் தந்தை கேட்டு பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தின் மதிப்பு அவர் வாங்கிய 3 கோடியே 10 லட்சத்தை விட மிக கம்மி எனவும், நிலத்தின் மதிப்பை கூட்டி போலி ஆவணம் தயாரித்து தன்னிடம் விற்றதும் தற்பொழுது புரோட்டா சூரி அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த நிலமும் தற்போது வில்லங்கமான இடமாக இருப்பதால் அதை மீண்டும் அவரிடமே ஒப்படைத்துள்ளார். இருப்பினும் ரமேஷ் சூரியிடம் பணத்தை கொடுக்காமல் இருந்ததால் , காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் முன்னாள் டிஜிபி என்பதால் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே தனது பணத்தை மோசடி செய்துள்ளதாக, ரமேஷ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் மீதும் சேர்த்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி மனு அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த குற்றவியல் போலீசார் இதனடிப்படையில் ரமேஷ் மற்றும் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் என் மீதும், தந்தை மீதும் வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றசாட்டுகள் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது எனவும், சட்டப்படி அவற்றை எதிர்கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…