இத்தாலியிலுள்ள மிலன் நகரில் 20 மாடி கட்டிடம் ஒன்று தீ பிடித்து எரிந்துள்ளது.
இத்தாலியிலுள்ள மிலன் நகர் எனும் பகுதியில் 60 மீட்டர் உயரமுள்ள 20 மாடி கட்டிடம் ஒன்றின் 15-வது தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியதும், கட்டிடம் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மேலும் கட்டிடத்திற்குள் இருந்த இருபதுக்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்து தீ பரவி வந்ததால், அடுக்குமாடி கட்டடத்திற்குள் சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீ விபத்தில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட…
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 2 முதல்…
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மற்றும் அவர்களது மகளுக்கு மாதாந்திர…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…