சீனாவில் நோயாளியின் கண்ணில் இருந்து எடுக்கப்பட்ட 20 புழுக்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக சீனாவில், வான் என்ற ஒருவர் தனது கண்களில் ஏதோ ஒன்று நெளிந்து கொண்டே இருப்பது போல உணர்ந்துள்ளார். ஆனால், இது சோர்வின் நிமித்தம் ஏற்பட்டிருக்கக் கூடும் என நினைத்து அப்படியே விட்டு விட்டார். நாட்கள் செல்ல செல்ல கண்ணில் வலி அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, ஜியாங்சு மாஹனத்தின் சுஜோ நகரத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் வலது கண்ணிமைக்கு அடியில் சிக்கியிருந்த சிறிய புழுக்களின் தொகுப்பை கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து, மருத்துவர்கள் நோயாளியின் கண்ணிமையில் இருந்து புழுக்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்தனர். மொத்தம் 20 நூற்புழுக்கள் அவரது கண்களில் இருந்து எடுத்துள்ளனர். இந்த புழுக்கள் குறித்து, மருத்துவர்கள் கூறுகையில், இந்த லார்வாக்கள் புழுக்களாக உருவாக 15 முதல் 20 நாட்கள் ஆகும் என்றும், இந்த புழுக்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் ஒட்டிக் கொள்ளலாம் என்கின்றனர். இதனால், செல்லப்பிராணிகளின் சுகாதாரத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…