சீனாவில் கொவிட்-19 வைரசால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நகரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் கொவிட்-19 வைரசால் நேற்று (Tuesday) வரை சீனாவில் 136 பேர் உயிரிழந்துள்ளார்கள், நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 2004-ஆக உயர்ந்துள்ளது. அதில் 132 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இந்த வைரஸ் புதிதாக 1,749 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 1,693 பேர் ஹூபேயில் இருப்பவர்கள் என கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185-ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 542 பேருக்கு கொவிட-19 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் இருந்து 300 அமெரிக்கர்களை மீட்கும் பணியில் 2 வாரங்களுக்கு பிறகு அமெரிக்கா ஈடுபட்டது. இதில் 2 விமானங்கள் மூலம், டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா விமான நிலையங்களுக்கு அமெரிக்கர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களில் 14 பேர் கலிபோர்னியாவில் தனியாக தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…