ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசு படைக்கும் இடையே மிக பயங்கரமான உள்நாட்டுப்போர் அடிக்கடி ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடினமான ஒன்றாக இருந்தாலும் அமெரிக்காவின் முயற்சியால் தற்பொழுது அதன் பயனாக தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் வைத்து அமைதி முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அமைதியான பேச்சு வார்த்தை ஒரு பறம் நடைபெற்று வந்தாலும் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு ஆப்கானிஸ்தானின் மாகாணத்தின் 5 மாவட்டங்களில் பாதுகாப்பு ராணுவத்தினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…