தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் .! 3 பேர் பலி .!

Published by
murugan
  • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த  ஞாயிற்றுக் கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
  • அப்போது ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.அதில் மூன்று பேரின் உடலில் குண்டுகள் பாய்ந்தது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரின் ஒரு தேவாலயம் உள்ளது.இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் அதாவது  ஞாயிற்றுக்கிழமை காலை  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பிரார்த்தனையில் இருந்த ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதனால் தேவாலயத்துக்குள் இருந்தவர்கள்  அனைவரும் பயத்தில் கத்தினர்.

பலர் அங்கு உள்ள மேஜைகளுக்கு அடியில் பதுங்கினர். இந்நிலையில் அந்த மர்ம நபர்  சுட்டதில் 3 பேர் உடலில் குண்டுகள் பாய்ந்தது. இந்த சம்பவத்தை அந்த நபர் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் நேரலையில் ஒளிபரப்பினார். பின்னர் தேவாலயத்தின் பாதுகாவலர்களில் ஒருவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த மர்ம நபரை சுட்டு கொன்றார்.

துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 பேரையும் போலீசார் மீட்டு  மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அந்த மூன்று பேரில் சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.இந்த தாக்குதல் யார் நடத்தியது..? தாக்குதலின் பின்னணி என்ன..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

20 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

4 hours ago