அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரின் ஒரு தேவாலயம் உள்ளது.இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பிரார்த்தனையில் இருந்த ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதனால் தேவாலயத்துக்குள் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் கத்தினர்.
பலர் அங்கு உள்ள மேஜைகளுக்கு அடியில் பதுங்கினர். இந்நிலையில் அந்த மர்ம நபர் சுட்டதில் 3 பேர் உடலில் குண்டுகள் பாய்ந்தது. இந்த சம்பவத்தை அந்த நபர் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் நேரலையில் ஒளிபரப்பினார். பின்னர் தேவாலயத்தின் பாதுகாவலர்களில் ஒருவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த மர்ம நபரை சுட்டு கொன்றார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அந்த மூன்று பேரில் சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.இந்த தாக்குதல் யார் நடத்தியது..? தாக்குதலின் பின்னணி என்ன..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…