ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்ற 4 பேர் பத்திரமாக பூமி திரும்பியுள்ளனர்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறது.
இதன்மூலம்,விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் வகையில்,அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலமாக விண்வெளி வீரர்கள் அல்லாத அமெரிக்காவின் ’ஷிப்ட் 4 பேமன்ட்ஸ் ’ நிறுவன தலைவர் மற்றும் கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர்,பால்கன் 9 ராக்கெட் மூலம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விண்வெளிக்கு சென்றனர்.
இதற்கிடையில்,புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் எப்படி வசிப்பது என்பது குறித்த பயிற்சிகள் அவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,பால்கன் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இன்ஸ்பிரேஷன் 4 எக்ஸ் விண்கலம், 3 நாட்களாக பூமியிலிருந்து 575 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்தது.
இந்நிலையில்,விண்வெளிக்கு சுற்றுலா மேற்கொண்ட நான்கு பேரும் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் பாராசூட் உதவியின் மூலம் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அட்லாண்டிக்கில் புளோரிடா கடற்கரையில் பத்திரமாகத் தரையிறங்கினர். இவர்கள் தரையிறங்கும் காட்சி யூடியூபில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும்,இதன் வீடியோவை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.அதன்பின்னர்,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் விண்வெளி சென்று திரும்பியவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக,ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்கலம் மூலமாக, அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ் விண்வெளி சென்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…