பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal
  • தென்கொரியாவில் பயணிகள் பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
  • இந்த விபத்தில் பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் கொரியாவில் உள்ள தென் கிழக்கு பகுதியான குவான்ஜூ நகரில் உள்ள ஒரு சாலையில் பயணிகளை ஏற்றுவதற்காக அருகிலிருந்த பஸ் நிலையத்தில் உள்ள பேருந்து நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பஸ் நிலையம் அருகே ஒரு 5 மாடி கட்டிடம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் மீது இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் என பல சிக்கினர்.

எனவே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்தவர்கள் உட்பட 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த கட்டிட விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

5 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், கட்டிடம் பலவீனமாக இருந்ததாகவும் அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மேலும் இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு தென்கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

4 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

27 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

2 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

2 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

3 hours ago