6 வயது இந்திய வம்சாவளி சிறுமி பருவநிலை மாற்ற செயல்பாட்டிற்காக இங்கிலாந்து பிரதமரின் விருதை பெற்றார்.
ஆறு வயது இந்திய வம்சாவளி சிறுமி அலிஷா காதியா, பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்திற்காக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் “பாயிண்ட்ஸ் ஆஃப் லைட்” விருதைப் பெற்றார். பிரிட்டிஷ் PM பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருதைப் பெறும் 1,755 வது நபராக அலிஷா ஆனார்.
அலீஷா காதியா புவி வெப்பமடைதல், காடழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் non-profit ‘Cool Earth’ என்ற என்ஜிஓ -வில் உறுப்பினராக உள்ளார். non-profit ‘Cool Earth’க்காக அலீஷா காதியா இதுவரை 3,000 பவுண்டுகளுக்கு மேல் திரட்டியுள்ளார். மத்திய இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம்ஷையரின் மேற்கு பிரிட்ஜ்போர்டைச் சேர்ந்த அலிஷா தனது பள்ளியில் காலநிலை மாற்ற கிளப்பையும் அமைத்துள்ளார்.
அதில், குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் காடு வளர்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற செயல்பாடுகளுடன் சுற்றுச்சூழலைப் பற்றி அக்கறை கொள்ள மற்றவர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும்,80 கிமீ சைக்கிள் பயணம் செய்து பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சிறப்பு என்னவென்றால், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநருமான டேவிட் அட்டன் பாரோ அதை ஆதரித்தார்.
அலிஷா கூறுகையில் “இந்த விருது குறித்து நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். எனக்கு இந்த விருது கிடைக்கும் என்று நான் நினைத்ததில்லை. என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…