மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் 61 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், உலகமே பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தவிர மற்ற நோயாளிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் கர்ப்பிணி பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் 61 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். போதிய மருத்துவ வசதி கிடைக்காததே இதற்க்கு காரணம் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவ கவனிப்பு இல்லாமை, நிமோனியா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் புதிதாக பிறந்த குழந்தைகள் இறப்பை சந்திக்கின்றனர். இதுதொடர்பாக பேசிய சுகாதார இயக்குநர் அமன் போர், ‘கொரோனா தொற்று காரணமாக மாநில சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் திசை திருப்பப்படுவதால், தாய்- சேய் இறப்பு விகிதம் அதிகம் உயர்ந்துள்ளது கவலைக்குரியது என்றும், போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், மருத்துவமனையில் அனுமதி கிடைக்காத கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பை சந்தித்துள்ளனர்.’ என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…