மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் 61 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், உலகமே பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தவிர மற்ற நோயாளிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் கர்ப்பிணி பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் 61 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். போதிய மருத்துவ வசதி கிடைக்காததே இதற்க்கு காரணம் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவ கவனிப்பு இல்லாமை, நிமோனியா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் புதிதாக பிறந்த குழந்தைகள் இறப்பை சந்திக்கின்றனர். இதுதொடர்பாக பேசிய சுகாதார இயக்குநர் அமன் போர், ‘கொரோனா தொற்று காரணமாக மாநில சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் திசை திருப்பப்படுவதால், தாய்- சேய் இறப்பு விகிதம் அதிகம் உயர்ந்துள்ளது கவலைக்குரியது என்றும், போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், மருத்துவமனையில் அனுமதி கிடைக்காத கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பை சந்தித்துள்ளனர்.’ என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…