அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட் என்னுமிடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுமி உயிரிழந்ததுடன், அவரது தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட் எனும் இடத்தில் ஜோண்டே ஆடம்ஸ் எனும் 28 வயது நபர் அவரது ஏழு வயது மகள் ஜாஸ்மின் ஆடம்ஸ் உடன் தங்கள் காரின் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஜேண்டே ஆடம்ஸின் 7 வயது மகள் ஜாஸ்மின் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் ஜேண்டேயும் அவ்விடத்தில் மிகவும் தாக்கப்பட்டுள்ளார். அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் அவரது ஏழு வயது மகள் ஜோஸ்லின் சம்பவ இடத்திலேயே துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் அடிவயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த சிறுமிக்கு 3 உடன்பிறப்புகள் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், அவரது தாயாருக்கும் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…