75,000 பசுமாடுகள்..ரூ.760 கோடி கடன்.! இரு நாட்டிடையே ஒப்பந்தம்.!

கடன் பிரச்சனையில் இருந்து மீளுவதற்கு தனது நாட்டில் உள்ள பசுமாடுகளை கொடுத்து கடனில் இருந்து மீண்டது வடமத்திய ஆப்ரிக்க நாடு சாத்.
வடமத்திய ஆப்ரிக்க நாடு சாத், இந்நாட்டிற்கு எண்ணெய் வளம் இருந்தாலும் கூட அந்த வருமானம், போதுமானதாக இல்லை. இதன் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டில் அண்டை நாடான அங்கோவிடம் ரூ.760 கோடி கடன் வாங்கியது. இந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடனை திரும்ப கொடுக்க ஒரு முடிவு செய்துள்ளது. அதாவது, தன் நாட்டில் ஏராளமாக இருக்கும் பசு மாடுகளை கடனுக்கு பதிலாக தருவதாக அங்கோலாவிடம் சாத் கூறியது. அங்கோலாவில் மாட்டிறைச்சி மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நாட்டில் இருந்து பிற ஆப்ரிக்கா நாடுகளுக்கு மாட்டிறைச்சி அனுப்பப்படுகிறது. இதனால் கடனை வசூலிக்க வேறுவழியின்றி தன் நாட்டில் இருக்கும் இறைச்சி தொழிலையாவது பலப்படுத்தலாம் என்ற அடிப்பபையில் அதற்கு அங்கோலா நாடு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 பசுமாடுகள் அனுப்ப வேண்டும் என சாத் நாட்டிடம் கூறியுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக 4,500 பசுமாடுகளை சாத் அனுப்பியுள்ளது. இதனை பெற்றுக்கொண்ட அங்கோலா, நோய் பாதித்த மாடுகளை அனுப்பி வைத்திருக்கிறதா என்று சந்தேகப்பட்டு, அதனை ஆராய்வதற்காக ஒரு மைதானத்தில் அனைத்து மாடுகளையும் கடந்த ஒரு மாதத்திற்கு அடைத்து வைத்துள்ளது. தற்போது அந்த மாடுகளுக்கு எந்தவொரு தொற்றும் தெரியவில்லை. இதனால் அதை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்க அங்கோலா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முந்தைய காலத்தில் பண்டமாற்றும் முறை இருந்ததை கேள்விப்பட்டிருப்போம். தற்போது அதுபோன்று முதல் முறையாக இரு நாடுகளும் பண்டமாற்று முறையில், கடன் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025