மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை விபத்து.! 9 பேர் உயிரிழப்பு.!

Published by
மணிகண்டன்

சென்னை: மெக்சிகோவில் குடிமக்கள் இயக்கம் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்சிகோவில் வரும் ஜூன் 2ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடிமக்கள் இயக்கம் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் போட்டியிடுகிறார். நேற்று மெக்சிகோவின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸிற்கான பிரச்சார மேடை அமைக்கப்பட்டது.

பிரச்சார மேடை அமைக்கப்பட்ட இடத்தில் பலத்த காற்றடித்த காரணத்தால், பிரச்சார மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நியூவோ லியோன் கவர்னர் சாமுவேல் கார்சியா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், விபத்தில் சிக்கியவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். இதுவரை 8 பெரியவர்கள் 1 சிறுவன் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.

இது குறித்து பேசிய  ஜனாதிபதி வேட்பாளராக ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ், இவ்வளவு துயரமான செய்தியை நான் பார்த்ததில்லை. விபத்து குறித்து அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்த வேண்டும். என்றும்  உயிரிழந்தோர் குறித்து தனது வருத்தத்தையும் பதிவு செய்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

6 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

7 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

7 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

8 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

8 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

9 hours ago