உலக முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது. பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,85,807 ஐ எட்டியுள்ளது. இதனிஅடையே சீனாவில் தொடங்கிய வைரஸ், தற்போது அந்நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளில் வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 913 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 7,845 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,956 ஆக உள்ளது. மேலும் ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,716 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் தற்போது சிகிச்சை பெற்று வரும் 63, 460 பேரில் 5, 231 பேர் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் 16,780 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…