காதலியைத் தேடிச்சென்றவர் 2017 லிருந்து காணவில்லை… முகநூலில் மலர்ந்த காதலால் விபரீதம்!

Published by
Hema

சுவிட்சர்லாந்திற்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் நடைபாதையாக காதலியைத் தேடிச் சென்றவர் பாக்கிஸ்தானில் பிடிபட்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரசாந்த், தான் விரும்பிய ஒரு பெண்ணைச் சந்திக்கப் சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்தபோது அவர் பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அவரை வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைத்தது. மேலும் பிரசாந்த் நேற்று முன்தினம் ஹைதராபாத்திற்கு வந்தடைந்தார். அதாவது பிரசாந்த் என்ற மென்பொருள் பொறியாளர் ஏப்ரல் 2017 இல் காணாமல் போயிருந்தார். 30 மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, அவர் பாகிஸ்தானில் சிக்கியிருப்பதை பிரசாந்தின் தந்தை பாபு ராவிடம் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார்.

மேலும் பிரஷாந்தின் நிலைமை குறித்து சஜ்ஜனார் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இமிக்ரேஷன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பேஸ்புக்கில் சந்தித்த ஒரு பெண்ணுடன் பிரசாந்த் காதல் கொண்டதாகவும், அந்த பெண் சுவிட்சர்லாந்திற்கு இடம் பெயர்ந்ததால் பிரசாந்த் மனச்சோர்வடைந்ததாகவும் இமிக்ரேஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்விளைவாக பிரசாந்த் தனது காதலியை சந்திக்க பாஸ்போர்ட், விசா இல்லாமல் சுவிட்சர்லாந்திற்கு நடைபாதை ஒன்றை கண்டுபிடித்து சென்றுள்ளார். அதாவது இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கி வழியாக சுவிட்சர்லாந்திற்கு குறுகிய பாதையில் செல்லக்கூடிய பாதையை பிரசாந்த் தேர்ந்தெடுத்து சென்றுள்ளார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் விசா மற்றும் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததற்காக பாகிஸ்தான் அதிகாரிகளால் அவர் பிடிபட்டார் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இமிக்ரேஷன் மற்றும் வெளிவிவகார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர், பிரசாந்த் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Hema

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

4 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

5 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

6 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago