பீர் குடித்துவிட்டு குழந்தை அருகில் படுத்திருந்தது குற்றமல்ல.! 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்.!

Published by
மணிகண்டன்

குழந்தை அருகில் தாய் பீர் அருந்தி படுத்திருப்பது குற்றமல்ல. இந்த மரணம் அஜாக்கிரதையாக நடைபெற்றதே என கூறி மூரியல் மாரிசன் என்கிற பெண்மணியின் 20 ஆண்டுகால சிறை தண்டனையை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்.

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு மூரியல் மாரிசன் என்கிற பெண்மணி தனது 4 மாத குழந்தையுடன் தன் வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் பீர் குடித்துவிட்டு குழந்தை அருகிலேயே படுத்துறங்கியுள்ளார். அவர் காலையில் கண்விழித்து பார்க்கையில் குழந்தை இறந்து கிடந்துள்ளது.

இதனை அறிந்த காவல்துறையினர், பீர் குடித்துவிட்டு குழந்தை அருகில் படுத்திருந்ததாலே குழந்தை இறந்துள்ளது என மூரியல் மாரிசன் மீது குற்றம் சாட்டினார். இதன் காரணமாக நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து அந்த பெண் வேறு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், குழந்தை அருகில் தாய் பீர் அருந்தி படுத்திருப்பது குற்றமல்ல. இந்த மரணம் அஜாக்கிரதையாக நடைபெற்றதே. இது விபத்து ஆகும். ஒரு தாய் தன் குழந்தையை வேண்டுமென்றே கொல்ல நினைக்க மாட்டார். என மேரிலேண்ட் நீதிமன்றம் தீர்ப்பளித்து மூரியல் மாரிசனை விடுதலை செய்துவிட்டது.

Published by
மணிகண்டன்
Tags: #USA

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago