தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோண் நடிக்கவுள்ளதாக தகவல்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடித்துள்ள நிலையில், வருகின்ற நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 169-படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசுங்கு பெரிய சாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் தலைவர் 169 குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தீபிகா படுகோணிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கேஎஸ் ரவி குமார் இயக்கத்தில் உருவாகவிருந்த ராணா திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோண் நடித்து வந்தார். அதன் பிறகு ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தால் படம் அப்படியே கைவிடப்பட்டது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…