போதை பொருள் வழக்கில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன்.!

Published by
Ragi

போதைப் பொருள் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கைதான பிரபல கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் காதலியும் ,நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது .அதனை தொடர்ந்து இந்த போதை பொருள் வழக்கு தொடர்பாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான தீபிகா படுகோனே,ரகுல் ப்ரீத்தி சிங்,சாரா அலிகான் உள்ளிட்ட பலருக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர் .

அதனையடுத்து கன்னட திரையுலகிலும் போதை பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து பிரபல கன்னட நடிகைகளான ராதிகா திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரையும் ,அவரது நண்பர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இருவரும் பலமுறை ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர் .ஆனால் அதனை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி மீண்டும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் .அது இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது .விசாரணையில் போதைப் பொருள் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
Ragi

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

16 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

42 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

1 hour ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago