ஆப்கான் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 200 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அந்நாட்டில் உள்ள தாலிபான்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நேற்று ஆப்கானிஸ்தான் செபேர்கன் பகுதியில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் விமானப்படை அதிரடியாக அவ்விடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் காரணமாக 200 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், செபேர்கன் நகரில் பதுங்கியிருந்த ஆப்கான் தலிபான்கள் மீது விமானப் படை நடத்திய தாக்குதலில் 200 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், தலிபான்களின் ஆயுதங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டு அழித்து நாசமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…