ஆப்கான் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த போப் வலியுறுத்தல்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நேற்று தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஆப்கானில் நடைபெற்றுள்ள பிரச்சனை குறித்து, போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். வாடிகனில் நடைபெற்ற வாராந்திர வழிபாட்டின் போது, இதுகுறித்து பேசிய அவர், ஆப்கானிஸ்தான் குறித்து ஒருமித்த அக்கறைகொள்வோரின் குழுவில் தானும் இணைவதாக தெரிவித்தார். மேலும், அவர்களுக்காக தன்னுடன் இணைந்து, இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…