ஸ்லோவேகியாவின் பிராடிஸ்லாவா மற்றும் நைட்ராவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பெட்ரோலின் மூலம் இயங்கும் பறக்கும் கார் 35 நிமிடம் பறந்துள்ளது.
பறக்கும் காரை தயாரித்த பேராசிரியர் ஸ்டீபன் க்ளீன் இது குறித்து கூறுகையில், இந்த பறக்கும் கார் சுமார் 1,000 கி.மீ. தொலைவு, 8,500 அடி உயரத்தில் பறக்கும் என்று கூறியுள்ளார். இந்த பறக்கும் காரில் பிஎம்டபிள்யூவின் வழக்கமான என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது பெட்ரோல்-பம்ப் மூலமாக இயங்குகிறது. இதை காராக நாம் பயன்படுத்தியதை தொடர்ந்து விமானமாக மாற்றம் செய்வதற்கு 2 நிமிடங்கள் 15 வினாடிகளே தேவைப்படும். காரிலிருந்து விமானமாக அதன் இறக்கைகளுடன் மாறும் விதத்தில் வடிவமைத்துள்ளனர்.
இந்த விமானம் சுமார் 170 கி.மீ. வேகத்தில் காற்றில் பறந்துள்ளது. இந்த விமானத்தை சர்வதேச விமான நிலையங்களான நைட்ரா மற்றும் ஸ்லோவேகியாவில் உள்ள பிராடிஸ்லாவா ஆகியவற்றிற்கு இடையில் இயக்கியுள்ளனர். இந்த விமானத்தில் 2 நபர்கள் பயணிக்க முடியும். மேலும் இதில் 200 எடை அளவு தாங்கும் விதத்தில் தயாரித்துள்ளனர். இந்த பறக்கும் காரை ஓடுபாதையின் உதவியோடு தான் தரையிறக்க முடியும்.
தற்போதுள்ள போக்குவரத்து நெருக்கடி சூழ்நிலையில் இதுபோன்ற வாகனம் நல்ல வரவேற்பை பெறக்கூடியதாக உள்ளது. இதனையடுத்து செவ்வாய்கிழமையன்று நடந்த தொழில் கூட்டத்தில் ஐரோப்பியாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மைக்கேல் கோல், இந்த பறக்கும் காரை குறித்து ‘இது எங்கள் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டார். இதுவரை இந்த ஏர்காரிற்கு அமெரிக்காவில் 40,000 ஆர்டர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…