3600 டான்சர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களுக்கான தொகையை நடிகர் அக்ஷய் குமார் வழங்கியுள்ளார்.
கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில், பிரபல நடிகரான அக்ஷய் குமார் கொரோனா முதல் அலையின்போதே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அதிக அளவிலான நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை மற்றும் பல உதவிகளை செய்து வந்தார்.
அதைபோல் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், 3600 நடன கலைஞர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான உணவுப்பொருள்களை நடிகர் அக்ஷய் குமார் வழங்கியுள்ளார்.
இந்த தகவலை நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ” எனது 50 வது பிறந்த நாளை ஒட்டி அக்ஷய் குமாரிடம் நடக்குழுவினருக்கு உதவி செய்யும்படி கோரிக்கை வைத்தேன். அதை தொடர்ந்து 3600 நடன கலைஞர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களுக்கான தொகையை எனது அறக்கட்டளையிடம் அக்சய் குமார் கொடுத்துள்ளார். இந்த உதவிக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…